தமிழ்நாட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களை போல வாரம் 2 நாட்கள் விடுமுறை


தமிழ்நாட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களை போல வாரம் 2 நாட்கள் விடுமுறை
The Issue
தனியார் துறை ஊழியர்களுக்கும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கினால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இந்த இரண்டு நாட்கள் விடுமுறையை பெறுவது அவ்வளவு கஷ்டமான காரியமும் அல்ல, நம்முடைய விருப்பத்தை தமிழக அரசுக்கு தெரிய படுத்த வேண்டும் அவ்வளவு தான். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இந்த இணைய தலத்தில் கையெழுத்து போட, ஒரே ஒரு கிளிக் செய்ய வேண்டும். செய்வீர்களா?
வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கினால், கிடைக்கும் நன்மைகள்:-
1. குடும்பத்தினருடன் அதிகநேரம் செலவிடமுடியும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் மனம் விட்டு பேச போதுமான நேரம் கிடைக்கும்.
2. இரண்டு நாட்கள் விடுமுறை ஓய்வு உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்து சிறப்பாக பணியாற்ற வழிவகுக்கின்றது. இதனால் உற்பத்தி அதிகரிக்கின்றது அலுவலக பணியும் மேம்படுகின்றது.
3. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும். தோராயமாக 25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி தமிழகத்தில் வறுமை நீங்கும்.
4. தொழில் நிறுவனங்களும், வணிக கடைகள் மேலை நாடுகளை போல் சிறந்த மேலாண்மை உத்திகளை கையாண்டால், உற்பத்தி செலவு அதிகம் செய்ய வேண்டிய தேவையில்லை. தொழில் வணிக நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. தொழிலாளர்களின் நலன் கருதி இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை தருகின்றார்கள். அவர்கள் முட்டாள்கள் அல்ல. உலகில் உள்ள அனேக நாடுகள் அவர்களின் தொழிலாளர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை தருகின்றார்கள். அவர்களின் மேலாண்மை தத்துவத்தை நாமும் பின்பற்ற வேண்டும்.
5. ஒரு ஊழியர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்கும் போது அவரது உடலில் இயக்குநீர் நன்கு சுரந்து நோய் வராமல் தடுத்து உடலின் ஆரோக்கியத்தை பேணி காக்கின்றது. ஓய்வை விட சிறந்த டானிக் வேறு எதுவும் இல்லை என்று ஆய்வு கூறுகிறது.
6. வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை கிடைப்பது ஊழியர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தி, அவர்கள் மீண்டும் வேலைக்கு வரும்போது அதிக சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்
இது போல பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. வாரத்தின் அணைத்து நாட்களும் மெதுவாக நகர்கின்றன. ஆனால் ஞாயிற்று கிழமை மட்டும் படு வேகமாய் பொழுது போய்விடும். அது எப்படி என்றல், ஞாயிற்று கிழமை என்பதால் சிறிது லேட்டாக எழுதிருப்போம், சாப்பிடுவோம், சிறிது நேரம் TV பார்ப்போம், சிறிது நேரம் தூங்குவோம. அவ்வளவு தான் ஞாயிற்று கிழமை ஓடியே போய்விடும். நாளைக்கும் விடுமுறை யாக இருந்தால் எப்படியிருக்கும் என்று மனம் ஏங்கி தவிக்கும்.
ஞாயிற்று கிழமை கட்டாய விமுறை என்று ஏற்கனேவே தொழிலாளர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்னொரு நாள் விடுமுறை வாரத்தின் எதாவது ஒரு நாளில் சுழற்சி முறையில் கொடுக்கலாம்.
அரசு நினைத்தால் தொழிலாளர் நலன் கருதி வேலை நேரத்தைக் குறைக்கவும், விடுமுறை நாட்களை அதிகரிக்கவும் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர அதிகாரம் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் (Seventh Schedule) பட்டியல் III-ல் உள்ள பதிவுகள் 22, 23 மற்றும் 24-ன் கீழ், தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் குறித்துச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
நாம் அனைவரும் கோரிக்கையை வலியுறுத்தினால், தமிழக அரசு நிச்சியமாக நிறைவேற்றும். நாம் மகிழ்ச்சியாக இரண்டு நாட்கள் விடுமுறையை கழிக்கலாம். நீங்கள் அனைவரும் ஆதரவு கொடுங்கள் வெற்றி பெறுவோம்.
நம்முடைய இன்பமும் சந்தோஷமும் வேறு யார் கையிலும் இல்லை.என்னுடைய கையிலும் இல்லை. ஏன் அந்த கடவுளின் கையிலும் இல்லை. ஆனால் உங்கள் கையில் இருக்கின்றது.
உங்கள் பொன்னான கையெழுத்து போட, ஒரே ஒரு கிளிக் செய்ய வேண்டும். மறந்து விடாதீர்கள்
இத்திட்டத்திற்கு ஆதரவு தருபவர்கள் இந்த 9514441964 WhatsApp குழுவில் Hi சொல்லி “ இணையுங்கள்".
முதல்வரின் ( CM grievance Cell) தனிப்பிரிவுக்கு 2 நாட்கள் விடுமுறை கேட்டு கோரிக்கையை அனுப்புனேன். தொழிலாளர்கள் நலன் கருதி சட்டம் இயற்றி கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தும் மறுத்துள்ளனர். அதன் நகலையும், அதற்காக கிடைக்க பெற்ற பதிலையும் கீழே இணைத்துள்ளேன்.



12
The Issue
தனியார் துறை ஊழியர்களுக்கும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கினால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இந்த இரண்டு நாட்கள் விடுமுறையை பெறுவது அவ்வளவு கஷ்டமான காரியமும் அல்ல, நம்முடைய விருப்பத்தை தமிழக அரசுக்கு தெரிய படுத்த வேண்டும் அவ்வளவு தான். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இந்த இணைய தலத்தில் கையெழுத்து போட, ஒரே ஒரு கிளிக் செய்ய வேண்டும். செய்வீர்களா?
வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கினால், கிடைக்கும் நன்மைகள்:-
1. குடும்பத்தினருடன் அதிகநேரம் செலவிடமுடியும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் மனம் விட்டு பேச போதுமான நேரம் கிடைக்கும்.
2. இரண்டு நாட்கள் விடுமுறை ஓய்வு உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்து சிறப்பாக பணியாற்ற வழிவகுக்கின்றது. இதனால் உற்பத்தி அதிகரிக்கின்றது அலுவலக பணியும் மேம்படுகின்றது.
3. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும். தோராயமாக 25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி தமிழகத்தில் வறுமை நீங்கும்.
4. தொழில் நிறுவனங்களும், வணிக கடைகள் மேலை நாடுகளை போல் சிறந்த மேலாண்மை உத்திகளை கையாண்டால், உற்பத்தி செலவு அதிகம் செய்ய வேண்டிய தேவையில்லை. தொழில் வணிக நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. தொழிலாளர்களின் நலன் கருதி இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை தருகின்றார்கள். அவர்கள் முட்டாள்கள் அல்ல. உலகில் உள்ள அனேக நாடுகள் அவர்களின் தொழிலாளர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை தருகின்றார்கள். அவர்களின் மேலாண்மை தத்துவத்தை நாமும் பின்பற்ற வேண்டும்.
5. ஒரு ஊழியர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்கும் போது அவரது உடலில் இயக்குநீர் நன்கு சுரந்து நோய் வராமல் தடுத்து உடலின் ஆரோக்கியத்தை பேணி காக்கின்றது. ஓய்வை விட சிறந்த டானிக் வேறு எதுவும் இல்லை என்று ஆய்வு கூறுகிறது.
6. வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை கிடைப்பது ஊழியர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தி, அவர்கள் மீண்டும் வேலைக்கு வரும்போது அதிக சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்
இது போல பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. வாரத்தின் அணைத்து நாட்களும் மெதுவாக நகர்கின்றன. ஆனால் ஞாயிற்று கிழமை மட்டும் படு வேகமாய் பொழுது போய்விடும். அது எப்படி என்றல், ஞாயிற்று கிழமை என்பதால் சிறிது லேட்டாக எழுதிருப்போம், சாப்பிடுவோம், சிறிது நேரம் TV பார்ப்போம், சிறிது நேரம் தூங்குவோம. அவ்வளவு தான் ஞாயிற்று கிழமை ஓடியே போய்விடும். நாளைக்கும் விடுமுறை யாக இருந்தால் எப்படியிருக்கும் என்று மனம் ஏங்கி தவிக்கும்.
ஞாயிற்று கிழமை கட்டாய விமுறை என்று ஏற்கனேவே தொழிலாளர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்னொரு நாள் விடுமுறை வாரத்தின் எதாவது ஒரு நாளில் சுழற்சி முறையில் கொடுக்கலாம்.
அரசு நினைத்தால் தொழிலாளர் நலன் கருதி வேலை நேரத்தைக் குறைக்கவும், விடுமுறை நாட்களை அதிகரிக்கவும் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர அதிகாரம் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் (Seventh Schedule) பட்டியல் III-ல் உள்ள பதிவுகள் 22, 23 மற்றும் 24-ன் கீழ், தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் குறித்துச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
நாம் அனைவரும் கோரிக்கையை வலியுறுத்தினால், தமிழக அரசு நிச்சியமாக நிறைவேற்றும். நாம் மகிழ்ச்சியாக இரண்டு நாட்கள் விடுமுறையை கழிக்கலாம். நீங்கள் அனைவரும் ஆதரவு கொடுங்கள் வெற்றி பெறுவோம்.
நம்முடைய இன்பமும் சந்தோஷமும் வேறு யார் கையிலும் இல்லை.என்னுடைய கையிலும் இல்லை. ஏன் அந்த கடவுளின் கையிலும் இல்லை. ஆனால் உங்கள் கையில் இருக்கின்றது.
உங்கள் பொன்னான கையெழுத்து போட, ஒரே ஒரு கிளிக் செய்ய வேண்டும். மறந்து விடாதீர்கள்
இத்திட்டத்திற்கு ஆதரவு தருபவர்கள் இந்த 9514441964 WhatsApp குழுவில் Hi சொல்லி “ இணையுங்கள்".
முதல்வரின் ( CM grievance Cell) தனிப்பிரிவுக்கு 2 நாட்கள் விடுமுறை கேட்டு கோரிக்கையை அனுப்புனேன். தொழிலாளர்கள் நலன் கருதி சட்டம் இயற்றி கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தும் மறுத்துள்ளனர். அதன் நகலையும், அதற்காக கிடைக்க பெற்ற பதிலையும் கீழே இணைத்துள்ளேன்.



12
The Decision Makers
Petition Updates
Share this petition
Petition created on 7 May 2026