
இதுவரை https://www.change.org/bondholder இற்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. அடுத்து வரும் சில தினங்களில் இந்த கோரிக்கை அடங்கிய மின்னஞ்சல் Fidelity Investment இற்கு அனுப்பி வைக்கப்படும் அதன் பின்னர் ஏனையவர்களுக்கும் தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்படும். IMF மற்றும் பல நாடுகள் சிறிலங்கா அரசுடன் கடன் மீள் சீரமைப்பில் ஈழ தமிழரின் ஆணை மற்றும் தமிழின அழிப்பு கவனத்தில் எடுக்கப்பட இது வழிவகுக்கும். ஈழ தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை மற்றும் நீண்ட வரலாறு கொண்ட தமிழீழ தாயகம் மதிக்க பட்டு தமிழருக்கு தம்மை ஆளும் உரிமையும் சிறிலங்கா பௌத்த சிங்கள இனவெறி அரசுகளில் இருந்து விடுதலையும் பெற புலம் பெயர் தமிழர்கள் பல முனைகளிலும் குரல் கொடுக்க வேண்டி உள்ளது. பொருளாதாரம் உலக அரசுகளின் அச்சாணி. அதனால், பொருளாதார வெளியில் குரல் கொடுப்பது பயன் தரும் என்று நம்புகிறோம். உங்கள் நண்பர்களிடம் கூறி மேலும் ஆதரவு கையொப்பங்களை இந்த கோரிக்கைக்கு வழங்குமாறு கேட்கவும்.
நன்றி,
உலகத் தமிழ் அமைப்புகளின் பேரவை - FGTO